Sunday, October 04, 2009

காரணங்கள் பலவிதம்

நேற்று காலை ஏழரை மணி இருக்கும் வழக்கம்போல பாதுஷா கடையில் வெந்நீர் (டீ?) சாப்பிட்டு விட்டு அன்றைய நாளிதழ் பார்த்து கொண்டிருந்தேன்,காலையிலேயே ஒருத்தர் கேட்டுட்டார் "என்ன மருமவன உங்க இதுல என்னமோ இவங்கள ஏருக்குமாற எழுதி இருக்குறதா பாசித் சொன்னான் என்னவே விஷயம்?" எங்க மாமாக்கு சொன்னதே உங்களுக்கும் பதிலாக,நான் சொன்ன விஷயம் இதுதான் மொதலில் என்னுடைய ப்ளோகில் நான் வெளிபடுத்திய செய்தி என்னுடைய நண்பரால் தரப்பட்டது மேலும் நான் யாருக்கும் என்னுடைய ப்ளோக்கை அறிமுகம் செய்தது கூட கிடையாது ,இது எங்களுடைய ஒரு குறிப்பிட்ட நண்பர்கள் வட்டத்துக்குள் நாங்கள் எங்கள் விஷயங்களையும், விமர்சனங்களையும் பரிமாரிக்கொள்ளுவதற்கு ஏற்படுத்தி கொண்டது மேலும் இப்பொழுது யார் வேண்டுமானாலும் ஒன்று என்ன ஆயிரம் ப்ளோக் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் ,இங்கே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன் தயவு செய்து இந்த ப்ளோக்கை படிக்காதீங்க வேணும்னா நீங்க ஒரு ப்ளோக் போட்டுகோங்க அதுல என்ன மாதிரி இல்லாம சமுதாய அக்கறையோட பல பதிவுகள் போடலாம்,தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க சும்மா செய்தி தான் "வண்ணா குடியில உள்பாவாடை கானாப்போனாலும் என்னைத்தான் புடிக்கிறாங்க" என்று சொன்னேன்,என்ன நெனச்சாரோ தெரியல மூஞ்சி ரொம்ப இறுக்கமாக இருந்தது. ஒருவேளை,பாதுஷா கடை டீ தான் காரணமோ?